​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு.. திருடனுக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த இளைஞர்கள்..!

Published : Jul 11, 2024 3:59 PM

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு.. திருடனுக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த இளைஞர்கள்..!

Jul 11, 2024 3:59 PM

நாகை அருகே, வீட்டு உரிமையாளர் மாடியில் தூங்கிக்கொண்டிருந்தபோது, பூட்டை உடைத்து நகைகளை திருடிச் சென்றவனுக்கு அப்பகுதி இளைஞர்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

கீழையூரில், தொடர் திருட்டுகள் நடந்துவந்ததால், இரவு வேளையில் இளைஞர்கள் சிலர், போலீசார் உடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டுவந்தனர். அவர்களை பார்த்ததும் ஓட்டம் பிடித்த நபரை துரத்தி பிடித்து விசாரித்தபோது, வடக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடி செல்வதாக தெரிவித்தான்.

கடந்த 2 ஆம் தேதி, அடுத்தடுத்து 7 வீடுகளில் அவன் கைவரிசை காட்டி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.