​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இதுவரையில் இல்லாதளவுக்கு பா.ஜ.க தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு: அண்ணாமலை

Published : Jul 06, 2024 6:52 PM

இதுவரையில் இல்லாதளவுக்கு பா.ஜ.க தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு: அண்ணாமலை

Jul 06, 2024 6:52 PM

தமிழகத்தில் அரசுக்கு எதிராக குரல் எழுப்பும் தொண்டர்களை தினமும் கைது செய்து சிறையில் அடைப்பதன் மூலம் பா.ஜ.க.வினரின் குரலை அடக்கிவிட முடியாது என அண்ணாமலை கூறினார்.

சென்னையை அடுத்த வானகரத்தில் அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய அவர், ஜனநாயக முறைப்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பா.ஜ.க.வின் பெண் தொண்டர்களை போலீசார் இரவு 11 மணி வரைக்கு அடைத்து வைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

செயற்குழு கூட்டத்தில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சிரமப்பட்டு தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்க்கும் அண்ணாமலைக்கு தொண்டர்கள் துணை நிற்க வேண்டும் என்றார்.