​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுவை விற்று அரசாங்கம் நடத்துவது கேவலம் என திருமாவளவன் நாடாளுமன்றத்தில் பேசினார்.. பாலை விற்று வருமானம் ஈட்டுவது தான் வளர்ச்சி- நீதிபதி ஏ.ஏ.நக்கீரன்

Published : Jul 06, 2024 7:30 AM

மதுவை விற்று அரசாங்கம் நடத்துவது கேவலம் என திருமாவளவன் நாடாளுமன்றத்தில் பேசினார்.. பாலை விற்று வருமானம் ஈட்டுவது தான் வளர்ச்சி- நீதிபதி ஏ.ஏ.நக்கீரன்

Jul 06, 2024 7:30 AM

குஜராத் மாநிலத்தில் அமுல் நிறுவனம் பாலை விற்றதன் மூலமாக வருமானத்தை ஈட்டியதுதான் வளர்ச்சி, சாராயத்தை விற்று வருமானத்தை ஈட்டுவது இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. நக்கீரன் கூறினார்.

மதுரை கோச்சடையில் உள்ள தனியார் பள்ளியில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், மதுவை விற்று அதன் மூலம் வரும் காசை வைத்து ஒரு அரசாங்கம் நடத்துவது கேவலமானது என்று தாம் சொல்லவில்லை என்றும் நாடாளுமன்றத்தில் திருமாவளவன் பேசியுள்ளதாகவும் நீதிபதி நக்கீரன் தெரிவித்தார்.