​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மூதாட்டியிடம் நகை பறிப்பு - பணிப்பெண் கைது

Published : Jul 05, 2024 10:00 AM

மூதாட்டியிடம் நகை பறிப்பு - பணிப்பெண் கைது

Jul 05, 2024 10:00 AM

நெல்லையில் 84 வயது மூதாட்டியை தாக்கி, நகைகளை பறித்து செல்ல முயன்ற பணிப்பெண்ணை அக்கம்பக்கத்தினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

வீட்டில் தனியாக வசித்துவரும் ருக்மணி என்ற மூதாட்டியை பகலில் கவனித்துக்கொள்வதற்காக கனகரத்தினம் என்ற பெண்ணை அவரது மகன் நியமித்துள்ளார்.

வேலையில் சேர்ந்து 4 நாட்களே ஆன நிலையில், கணகரத்தினம் பணி முடித்து வீட்டிற்கு செல்லும்போது மூதாட்டியை தாக்கி அவர் அணிந்திருந்த 2 தங்க செயின்களையும், கமலையும் பறித்ததுகொண்டு ஓட முயன்றதாக கூறப்படுகிறது.

காது மடல்கள் கிழிந்து ரத்தம் வழிய வலியால் துடித்த மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் தப்பியோடிய பணிப்பெண்ணை துரத்தி சென்று பிடித்தனர்.