​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடலூரில் அதிமுக நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை

Published : Jun 30, 2024 8:43 AM

கடலூரில் அதிமுக நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை

Jun 30, 2024 8:43 AM

கடலூர் வண்டிப்பாளையம் ஆலை காலனியைச் சேர்ந்த அதிமுக மாவட்டப் பிரதிநிதி புஷ்பநாதன், மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது, சூரசம்ஹார தெருவில் மர்ம கும்பல் வழிமறித்ததில், வண்டியைப் போட்டுவிட்டு ஓடிய அவரை அந்தக் கும்பல் துரத்திச் சென்று வெட்டிப் படுகொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

கொலையாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி, புஷ்பநாதனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களுடன் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.