​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்... 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்கத் தயார்: அன்புமணி

Published : Jun 26, 2024 6:46 PM

ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்... 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்கத் தயார்: அன்புமணி

Jun 26, 2024 6:46 PM

சாதிவாரி கணக்கெடுப்புக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும் வித்தியாசம் தெரியாமல் முதலமைச்சர் பேசுவதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பீகாரில் சாதிவாதி கணக்கெடுப்பை நீதிமன்றம் ரத்து செய்யவில்லை என்றும் அங்கு இட ஒதுக்கீடு வரம்பு மீறியதை தான் ரத்து செய்து இருக்கிறார்கள் என்றும் கூறினார். 

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர் சிவசங்கருடன் விவாதிக்கத் தயார் என்றும் தேதியையும் இடத்தையும் அவரே முடிவு செய்யட்டும் என்றும் அன்புமணி கூறினார். 

கள்ளக்குறிச்சியில் எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தான் சாராயம் விற்கப்படுவதாகக் கூறிய அன்புமணி, அது தொடர்பாக தங்கள் மீது தொடுக்கப்படும் வழக்குகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.