​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஃபிரிட்ஜை தண்ணீர் ஊற்றிக் கழுவிய ஓட்டல் ஊழியர் மின்சாரம் தாக்கி பலி

Published : Jun 10, 2024 5:08 PM

ஃபிரிட்ஜை தண்ணீர் ஊற்றிக் கழுவிய ஓட்டல் ஊழியர் மின்சாரம் தாக்கி பலி

Jun 10, 2024 5:08 PM

சென்னை துரைப்பாக்கம் -பல்லாவரம் சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் , சுத்தம் செய்யும் பணியின்போது, ஃபிரிட்ஜை தண்ணீர் ஊற்றிக் கழுவிய திரிபுராவைச் சேர்ந்த தன்குமார் என்ற இளைஞர்,  மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

அவரை காப்பாற்ற முயன்ற சக ஊழியர்களான திரிபுராவைச் சேர்ந்த மேலும் 2 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.  அருகில் இருந்தவர்கள் உடனடியாக மின்சாரத்தை துண்டித்து மூவரையும் மீட்டு  தனியார் மருத்துவ மனையில் சேர்த்ததில் தன்குமார் இறந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

மற்ற இருவரும் சிகிச்சைக்குப் பின்னர் நலமடைந்தனர். ஃபிரிட்ஜில் மின்கசிவு இருப்பதை அறியாமல் தண்ணீர் ஊற்றிக் கழுவியதே விபத்துக்குக் காரணம் என்று உயிர்தப்பிய ஊழியர்கள் கூறினர்.