​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாயனூர் அருகே கட்டளை காவிரி பகுதியில் மணல் திருடிச் சென்ற லாரியை விரட்டி பிடித்த வி.ஏ.ஓ.

Published : May 29, 2024 9:53 AM

மாயனூர் அருகே கட்டளை காவிரி பகுதியில் மணல் திருடிச் சென்ற லாரியை விரட்டி பிடித்த வி.ஏ.ஓ.

May 29, 2024 9:53 AM

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே கட்டளை காவிரி பகுதியில் அனுமதி இல்லாமல் மணல் அள்ளிச் சென்ற லாரியை கிராம நிர்வாக அலுவலர் ஸ்டாலின் பிரபு என்பவர் இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார்.

லாரியை நடுரோட்டில் நிறுத்திவிட்டு சாவியுடன் ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில், கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகேந்திரன் அங்கு சென்று விசாரணை செய்த பிறகு, மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு லாரி மாயனூர் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டது.