​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.16 லட்சம் மோசடி... போலி வட்டாட்சியரை கைது

Published : May 27, 2024 7:59 AM

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.16 லட்சம் மோசடி... போலி வட்டாட்சியரை கைது

May 27, 2024 7:59 AM

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் தன்னை வட்டாட்சியர் எனக் கூறி, அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் 16 லட்ச ரூபாய்க்கு மேல் பெற்று மோசடி செய்த கார் ஓட்டுநர் ஜேசுராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சக்திவேல் என்பவரது மனைவிக்கு பில் கலெக்டர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 2 லட்ச ரூபாய் கேட்ட ஜேசுராஜிடம், அவரது அடையாள அட்டையை சக்திவேல் கேட்டபோது ஜேசுராஜ் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. வாகன சோதனையில் ஜேசுராஜை போலீசார் மடக்கி கைது செய்து விசாரித்தபோதுதான், அவர் இதே பாணியில் பலரை ஏமாற்றியது தெரியவந்தது.