​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த 2 இளைஞர்கள்.. விசாரணையின் போது தப்பியோடியவர்களுக்கு காலில் மாவுக் கட்டு

Published : May 26, 2024 9:09 PM

தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த 2 இளைஞர்கள்.. விசாரணையின் போது தப்பியோடியவர்களுக்கு காலில் மாவுக் கட்டு

May 26, 2024 9:09 PM

கரூரில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 2 பேர் விசாரணையின் போது தப்பியோட முயன்றதில் கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

முனியப்பன் கோவில் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீஸாரை பார்த்ததும் எதிர் திசையில் டூவீலரை திருப்பிக் கொண்டுச் சென்ற 2 பேர் கீழே விழுந்ததால் அவர்களை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் என்பது தெரிய வரவே, பதுக்கி வைத்திருக்கும் பொருட்களை மீட்பதற்காக அவர்களை வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

தெரசா கார்னர் பகுதியில் சென்ற போது தப்பியோடிய இருவரும் அங்கிருந்த பாலத்திலிருந்து கீழே குதித்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.