​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
4 மாத ஆண் குழந்தை கொன்று புதைப்பு..?: தந்தை கைது

Published : May 26, 2024 4:59 PM

4 மாத ஆண் குழந்தை கொன்று புதைப்பு..?: தந்தை கைது

May 26, 2024 4:59 PM

சிவகங்கை மாவட்டம் நாட்டாகுடியில், மர்மமாக உயிரிழந்த 4 மாத ஆண் குழந்தையின் சடலத்தை தோண்டியெடுத்து உடற்கூராய்வு செய்த போலீஸார், குழந்தையின் தந்தையை கைது செய்தனர்.

அப்பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரின் மனைவி மஞ்சு கணவருடன் கோபித்துக் கொண்டு நாகர்கோவிலில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

மனைவி மற்றும் குழந்தையை காணாமல் சந்திரசேகர் தேடி வந்த நிலையில் வாய்க்கால் அருகே பையில் குழந்தையை வைத்து விட்டு தனது மகள் வந்திருப்பதாக மஞ்சுவின் தாயார் செல்ஃபோன் மூலமாக தகவல் தெரிவித்ததாகவும், அங்குச் சென்று பார்த்த போது குழந்தை உயிரிழந்த நிலையில் இருந்ததால் யாருக்கும் தெரிவிக்காமல் புதைத்தாகவும் கூறப்படுகிறது.

உடற்கூராய்வின் போது குழந்தையின் தலையில் தாக்கியது போல காயம் இருந்ததால் சந்தேகத்தின் பேரில் சந்திரசேகரை கைது செய்திருப்பதாகவும் மஞ்சுவை தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.