​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராஜ்கோட்டில் தனியார் மைதானத்தில் பயங்கர தீ விபத்து.. 9 சிறார்கள் உட்பட 27 பேர் உயிரிழப்பு

Published : May 26, 2024 6:16 AM

ராஜ்கோட்டில் தனியார் மைதானத்தில் பயங்கர தீ விபத்து.. 9 சிறார்கள் உட்பட 27 பேர் உயிரிழப்பு

May 26, 2024 6:16 AM

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டிலுள்ள பொழுதுபோக்கு மைதானம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 சிறார்கள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர்.

டி.ஆர்.பி கேமிங் சோன் என்ற பெயரிலான மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரத்தில் தீ பிடித்ததாகக் கூறப்படும் நிலையில், காற்றின் வேகத்தில் கூடாரம் சரிந்து ஏராளமானோர் அதற்குள் சிக்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

விபத்தில் படுகாயங்களுடன் தப்பிய 20க்கும் மேற்பட்ட சிறுவர்களை மீட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், 5 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மைதானத்தின் உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.