​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோயம்புத்தூர் இராணுவ வீரர் குடியிருப்பு பூங்காவில் மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் பலி

Published : May 24, 2024 6:25 PM

கோயம்புத்தூர் இராணுவ வீரர் குடியிருப்பு பூங்காவில் மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் பலி

May 24, 2024 6:25 PM

கோவை சரவணம்பட்டியிலுள்ள ராணுவ வீரர்கள் குடியிருப்பில் பூங்காவில் மின்சாரம் தாக்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் குடியிருப்பு நிர்வாகத்தின்பாதுகாப்பு குறைபாடே காரணம் என அங்கு ஆய்வு மேற்கொண்ட மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

6 வயதான ஜியான்ஸ் ரெட்டி என்ற சிறுவனும் 8 வயதான வியோமா பிரியா என்ற சிறுமியும் பூங்காவிலுள்ள சறுக்கில் ஏறி இறங்கி விளையாடியபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

சம்பவ இடத்தை ஆய்வு செய்த மின்வாரிய அதிகாரிகள், அண்மையில் புதுப்பிக்கப்பட்ட அந்தப் பூங்காவில் மின்விளக்குக்காக பூமிக்கடியில் புதைவடக் மின்கம்பிகள் அமைக்கப்பட்டதாகவும் அது சேதமடைந்திருப்பதை அறியாமல் அதன் மீதே உலோக சறுக்கு அமைக்கப்பட்டதால், மின்கசிவு ஏற்பட்டு விபத்து நடந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை முடிந்து குழந்தைகள் இருவரின் உடல்களும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டன.