​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுரை கல்லல் நாவல்கனியான்மடத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகளை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

Published : May 22, 2024 7:23 PM

மதுரை கல்லல் நாவல்கனியான்மடத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகளை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

May 22, 2024 7:23 PM

சிவகங்கை மாவட்டம் கல்லல் நாவல்கனியான்மடம் கிராமத்தில் நாளை நடக்கும் மஞ்சுவிரட்டு போட்டிக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு அம்மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், வரும் 31 ஆம் தேதியன்று மதகுபட்டியில் நடக்கவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதியளித்துள்ள நீதிபதிகள், இந்த 2 ஊர்களின் பெயர்களை ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அரசிதழில் வெளியிடுவதற்கான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.