​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கனமழை எச்சரிக்கையால் நாகையில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லத் தடை... படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ள மீனவர்கள்

Published : May 20, 2024 1:08 PM

கனமழை எச்சரிக்கையால் நாகையில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லத் தடை... படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ள மீனவர்கள்

May 20, 2024 1:08 PM

கன மழை எச்சரிக்கையால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர், பட்டினச்சேரி, செருதூர், விழுந்தமாவடி, வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 27 கடலோர கிராமங்களில் இருந்து மீனவர்கள் தொழிலுக்கு செல்லாத நிலையில், படகுகளை மீன்பிடி துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர்.

 

மன்னார்வளைகுடாவில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்ற எச்சரிக்கையால் நான்காவது நாளாக தூத்துக்குடி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

வேம்பார் முதல் பெரியதாழை வரை ஃபைபர் மற்றும் நாட்டுப்படகுகள் கரையோரங்களில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.