​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வீடு புகுந்து மாமனார் படுகொலை: மருமகன் கைது - மனைவிக்கு வைத்த குறியில் மாமனார் சிக்கியதாக தகவல்

Published : May 18, 2024 8:40 PM

வீடு புகுந்து மாமனார் படுகொலை: மருமகன் கைது - மனைவிக்கு வைத்த குறியில் மாமனார் சிக்கியதாக தகவல்

May 18, 2024 8:40 PM

தஞ்சாவூரில் தம்மை பிரிந்து தந்தை வீட்டில் வசித்த மனைவியை கொலை செய்யச் சென்ற இடத்தில் தவறுதலாக மாமனாரை வெட்டிக் கொன்றதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

காந்திபுரத்தில் ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ. ராஜமனோகரன் அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு இருந்தது பற்றி விசாரித்த போலீசார், சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் ராஜமனோகரனின் மருமகன் ராஜ்குமாரை கைது செய்தனர்.

விசாரணையில், குடும்பம் நடத்த வர மறுத்ததால் மனைவியை கொல்ல அவரது வீட்டு குளியலறைக்குள் பதுங்கி இருந்ததாகவும், அங்கு எதிர்பாராமல் வந்த மாமனார் சத்தம் போடுவதை தடுக்க அவரது வாயில் துணி வைத்து அழுத்தி கழுத்தை அறுத்துக் கொன்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். கொலைக்கு உதவியதாக அவரது நண்பர் சரவணகுமாரும் கைதனார்.