​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அவதூறு பேச்சில் கைது.. சவுக்கு சங்கரை கோவைக்கு அழைத்துச் சென்ற போது விபத்தில் சிக்கிய வாகனம்..!

Published : May 04, 2024 2:54 PM



அவதூறு பேச்சில் கைது.. சவுக்கு சங்கரை கோவைக்கு அழைத்துச் சென்ற போது விபத்தில் சிக்கிய வாகனம்..!

May 04, 2024 2:54 PM

காவல்துறை உயர் அதிகாரி மற்றும் பெண் காவலர்கள் குறித்து சமூகவலைதள பேட்டி ஒன்றில் அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

தேனியில் வைத்து சங்கரை கைது செய்த போலீசார், அவரை கோவைக்கு அழைத்துச்சென்ற போது, அவர்கள் பயணித்த வேன், திருப்பூர்- தாராபுரம் புறவழிச்சாலை ஐ.டி.ஐ கார்னரில் யூ-டேர்ன் செய்த காருடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில், வேனில் இருந்த சங்கருக்கும், அவரை அழைத்துச்சென்ற 3 காவலர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

சிகிச்சைக்கு பின்னர், மாற்று வாகனத்தில் சங்கர் கோவை அழைத்துச்செல்லப்பட்டார்.