​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஸ்படிக கல்லை மாணிக்கக் கல் எனக்கூறி ரூ.150 கோடி மோசடி பேரம்... 3 பேர் கைது

Published : Apr 25, 2024 7:19 PM

ஸ்படிக கல்லை மாணிக்கக் கல் எனக்கூறி ரூ.150 கோடி மோசடி பேரம்... 3 பேர் கைது

Apr 25, 2024 7:19 PM

ஸ்படிகக் கல்லை, மாணிக்கக் கல் என்று கூறி 150 கோடி ரூபாய்க்கு பேரம் பேசிய 3 மோசடி ஆசாமிகள் போலீஸ் பிடியில் சிக்கி உள்ளனர்.

கரூர் மாவட்டம் ஏமூரில் ஒரு வீட்டிற்கு வெளிமாவட்டங்களை சேர்ந்த 8 பேரை வரவழைத்து பேரம் பேசிக் கொண்டிருந்த போது அப்பகுதிமக்கள் அளித்த தகவலின் பேரில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன், மாணிக்கம் , மணிவேல் ஆகிய 3 பேரை ஸ்படிக கல்லுடன் போலீசார் கைது செய்தனர்