​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
லஞ்சம் வாங்கியதாக செய்தி வெளியானதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட வி.ஏ.ஓ

Published : Apr 25, 2024 11:48 AM

லஞ்சம் வாங்கியதாக செய்தி வெளியானதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட வி.ஏ.ஓ

Apr 25, 2024 11:48 AM

பொள்ளாச்சியில் தற்கொலை செய்துகொண்ட திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் வி.ஏ.ஒ கருப்புசாமி எழுதியதாக கூறப்படும் கடிதத்தை அவரது குடும்பத்தினர் உடுமலை வருவாய் கோட்டாச்சியரிடம் ஒப்படைத்தனர்.

அக்கடிதத்தில், தாம் லஞ்சம் வாங்கியதாக தனது உதவியாளர் சித்ரா தூண்டுதலின் பேரில் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானதால் மன உளைச்சலில் உயிரை மாய்த்துக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

கிராம நிர்வாக உதவியாளர் சித்ராவும், செய்தி வெளியிட்ட மணியன் ஆகியோர் தலைமைறைவாக உள்ளதாகவும், சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.