​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டெல்லி திகார் சிறையில் கெஜ்ரிவால் அறைக்கு அருகில் சோட்டாராஜன், பயங்கரவாதி ஜியாவுர் ரகுமான் அடைப்பு

Published : Apr 02, 2024 7:21 PM

டெல்லி திகார் சிறையில் கெஜ்ரிவால் அறைக்கு அருகில் சோட்டாராஜன், பயங்கரவாதி ஜியாவுர் ரகுமான் அடைப்பு

Apr 02, 2024 7:21 PM

டெல்லி திகார் சிறையில் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டுள்ள 2-ஆம் எண் அறைக்கு அருகில் பயங்கரவாதி ஜியாவுர் ரகுமான், தாவூத் இப்ராகிமின் கூட்டாளியான நிழல் உலக தாதா சோட்டா ராஜன், கொலை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி நீரஜ் பவானா ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குடும்பத்தினரிடம் தினமும் 5 நிமிடம் தொலைபேசியில் பேசவும், சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும் வரை தினசரி மதியம் மற்றும் இரவு வீட்டில் சமைத்த உணவை வழங்கவும் கெஜ்ரிவாலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.