​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோவை மாவட்டத்தில் ஏகலைவா பள்ளிகள் திறக்கப்படும்: அண்ணாமலை

Published : Apr 02, 2024 3:34 PM

கோவை மாவட்டத்தில் ஏகலைவா பள்ளிகள் திறக்கப்படும்: அண்ணாமலை

Apr 02, 2024 3:34 PM

தான் வெற்றி பெற்றால் கோவை மாவட்டத்தில் மலைவாழ் மக்களுக்கான ஏகலைவா பள்ளிகள் திறக்கப்படும் என்று பாஜக வேட்பாளர் அண்ணாமலை வாக்குறுதி அளித்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். 

கணுவாயில் பரப்புரை மேற்கொண்ட அண்ணாமலை, அரசு பணத்தில் நிறைவேற்றப்பட்ட திட்ட பயனாளிகளை திமுகவினர் பிச்சைக்காரர்களைப்போல் நடத்துவதாக குற்றச்சாட்டினார்.

சுற்றுச்சூழல் அனுமதி விவகாரம் தொடர்பாக மூடப்பட்டுள்ள தடாகம், கணுவாய் செங்கல் சூளை விவகாரத்தில் மத்திய அரசினால் எந்த பிரச்னையும் வாராது என வாக்குறுதி அளித்த அண்ணாமலை, குழந்தையை கிள்ளிவிட்டு, தொட்டிலை ஆட்டுவது தி.மு.க.வினரின் வேலை என்றார்.

சின்னத்தடாகம் பகுதியில் கூடியிருந்தவர்களிடம் கன்னடத்தில் பேசியும் அண்ணாமலை வாக்குசேகரித்தார்.