​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மிரட்டலுக்கு அஞ்சாதவர்.. சேகர் பாபுவை கோர்த்து விட்ட ஆர்.எஸ்.பாரதி ..! பிரதமர் மோடிக்கு தினமும் பதில் சொல்கிறாராம்

Published : Mar 17, 2024 9:35 AM



மிரட்டலுக்கு அஞ்சாதவர்.. சேகர் பாபுவை கோர்த்து விட்ட ஆர்.எஸ்.பாரதி ..! பிரதமர் மோடிக்கு தினமும் பதில் சொல்கிறாராம்

Mar 17, 2024 9:35 AM

சென்னையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, பல பேர் மோடி என்றாலே பயப்படுவதாகவும்,  நித்தமும் மோடிக்கு பதில் சொல்பவர் சேகர் பாபு மட்டும் தான் என்றும் புகழ்ந்து தள்ளினார்

சென்னை பாரிமுனையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அமைச்சர்களில் வேகமாக பேசும் அமைச்சர் என்று பெயர் பெற்று, எதிரிகளுக்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று தெரிந்து, நித்தமும் மோடிக்கு பதில் சொல்பவர் சேகர் பாபு தான் என்றார்,  காரணம், பல பேர் மோடி என்றாலே பயப்படுகிறார்கள் என்றார் ஆர்.எஸ்.பாரதி

தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, பாஜக தலைவர் அண்ணாமலையை கன்னடத்தை சேர்ந்தவர் என்று கடுமையாக விமர்சித்தார்