​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோயம்புத்தூர் காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் காலமானார்

Published : Mar 12, 2024 2:42 PM

கோயம்புத்தூர் காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் காலமானார்

Mar 12, 2024 2:42 PM

கோயம்புத்தூரில் காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் உடல்நலக்குறைவால் காலமானார். 55 வயதான அவர் மூச்சுத் திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உடல் காமாட்சிபுரம் ஆதினத்திற்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அண்மையில், டெல்லியில் நடந்த புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் பிரதமர் மோடிக்கு செங்கோல் வழங்கி ஆசி வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.