​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது: இபிஎஸ்

Published : Mar 03, 2024 4:33 PM

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது: இபிஎஸ்

Mar 03, 2024 4:33 PM

ஒரே நாளில் 180 கோடி ரூபாய் போதைப் பொருள் பிடிபட்டிருப்பதால், நாம் வாழ்வது தமிழ்நாடா அல்லது போதைப் பொருள் மொத்த விற்பனைக் கிடங்கா என்கிற கேள்வியை எழுப்புவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறியதாக திமுக அரசைக் கண்டித்தும் நாளை, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.