​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அப்பளம் தயாரிக்கும் இயந்திரத்தில் தலைமுடி சிக்கி படுகாயமடைந்த பெண்... ரூ.32 லட்சம் வழங்குமாறு அப்பள கம்பெனிக்கு உத்தரவு..!

Published : Feb 14, 2024 5:13 PM

அப்பளம் தயாரிக்கும் இயந்திரத்தில் தலைமுடி சிக்கி படுகாயமடைந்த பெண்... ரூ.32 லட்சம் வழங்குமாறு அப்பள கம்பெனிக்கு உத்தரவு..!

Feb 14, 2024 5:13 PM

அப்பளம் தயாரிக்கும் இயந்திரத்தில் தலை முடி சிக்கி படுகாயம் அடைந்த பெண் தொழிலாளிக்கு அப்பள கம்பெனி 32 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

நெடும்பலத்தை சேர்ந்த கார்த்திகா என்ற அப்பெண் தொடுத்த வழக்கில், முதலில் தனது முந்தானை சிக்கிய உடன் அப்பள இயந்திரத்தை நிறுத்தும் படி தாம் கேட்டதாக கூறியுள்ளார்.

ஆனால் நிறுத்துவதற்கு பதில் வழக்கத்தை விட 2 மடங்கு வேகத்தில் இயக்கியதால் இயந்திரத்தில் தமது தலைமுடி சிக்கி மூக்கு முதல் தலையின் மேற்புறம் வரை தோல் உரிந்து மண்டை ஓடு தெரியும் அளவிற்கு படுகாயம் அடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகும் கூட அப்பள கம்பெனி முதலாளி மருத்துவமனைக்கு அனுப்பாமல் பணியாளர் மூலம் தமது கணவரை வரவழைத்து அனுப்பி வைத்ததாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.