​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டெல்லியை நோக்கிச் செல்லும் போராட்டம் இன்றும் தொடரும்- விவசாயிகள் உறுதி

Published : Feb 14, 2024 7:05 AM

டெல்லியை நோக்கிச் செல்லும் போராட்டம் இன்றும் தொடரும்- விவசாயிகள் உறுதி

Feb 14, 2024 7:05 AM

டெல்லியை நோக்கிச் செல்லும் போராட்டத்தை இன்றும் முன்னெடுக்கப் போவதாக 200 விவசாய சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் ஹரியானா எல்லைப்பகுதியில் நேற்று போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

போலீசார் மீது விவசாயிகள் கல்வீச்சில் ஈடுபட்டனர். போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் கூட்டத்தைக் கலைக்க முயன்றனர்.

டிரோன்கள் மூலமும் விவசாயிகள் மத்தியில் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. இந்த மோதலில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் காயம் அடைந்திருப்பதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக நேற்று இரவு பேரணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.