​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை, கோவை உள்பட 11 இடங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ. சோதனையில் 4 பேர் கைது

Published : Feb 12, 2024 7:01 AM

சென்னை, கோவை உள்பட 11 இடங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ. சோதனையில் 4 பேர் கைது

Feb 12, 2024 7:01 AM

தமிழகத்தில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கு மற்றும் கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக 4 பேரை என் ஐ ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நடைபெற்ற தேசிய புலனாய்வு முகமை சோதனையில் 25 செல்போன்கள் 34 சிம் கார்டுகள் கம்ப்யூட்டர் சாதனங்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த சோதனையில் ஜமீல் பாஷா உமாரி, மௌலவி ஹுசைன், முகமது ஹுசைன், இர்ஷாத், ஜமீல், சையத் அப்துர் ரஹ்மான் உமரி ஆகியோர் கைது செய்யப்பட்டதாகவும், இவர்கள், மெட்ராஸ் அரபி கல்லூரி, கோவை அரபிக் கல்லூரியுடன் தொடர்புடையவர்கள் என என்.ஐ.ஏ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.