சென்னையில் நடைபெறும் அயலகத் தமிழர் தின விழா உலகத்தில் உள்ள அனைத்துத் தமிழர்களையும் ஒன்றிணைப்பதாக தெரிவித்த இங்கிலாந்தின் ஏம்ஸ் ப்ரி நகர மேயர் மோனிகா தேவேந்திரன், இங்கிலாந்தில் தமிழ்ச் சங்கம் உள்ளதாகவும், குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதகவும் தெரிவித்தார்.
துபாய் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் தமிழர்கள் என்று கூறினாலே நல்ல மரியாதை கிடைப்பதோடு, வேலை வாய்ப்பும் கிடைப்பதாக ஆப்ரிக்காவிலிருந்து பங்கேற்ற இளைஞர் கூறினார்.
சென்னை தமிழ் போன்ற கண்டி பகுதியிலும் பேசுவதாக தெரிவித்த இலங்கை சிறுமி, தனது இனிய குரலில் பாடல் பாடி அசத்தினார்.
தமிழர்கள் உலகளவில் தொழில்துறை மட்டுமின்றி மற்ற துறைகளிலும் எவ்வளவு முன்னேறி இருக்கிறார்கள் என்பதை இங்கு வந்து பார்த்த போது தெரிந்துக் கொண்டதாக இங்கிலாந்திலிருந்து வந்திருந்த பெண் தெரிவித்தார்.