​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டெல்லி ஜி 20 உச்சி மாநாட்டின் பாதுகாப்புக்காக தயார் நிலையில் நிறுத்தப்பட உள்ள ரபேல் உள்ளிட்ட போர் விமானங்கள்.. !!

Published : Aug 31, 2023 6:43 AM

டெல்லி ஜி 20 உச்சி மாநாட்டின் பாதுகாப்புக்காக தயார் நிலையில் நிறுத்தப்பட உள்ள ரபேல் உள்ளிட்ட போர் விமானங்கள்.. !!

Aug 31, 2023 6:43 AM

டெல்லியில் நடைபெற உள்ள ஜி 20 உச்சி மாநாட்டில் பாதுகாப்புக்காக இந்திய விமானப்படையின் ரபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட உள்ளன.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், சவூதி அரேபியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ள இந்த உச்சிமாநாட்டின் பாதுகாப்புக்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வான் தாக்குதல் தடுப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட சாதனங்களும் தலைநகரில் நிறுவப்பட உள்ளன.எந்த வகையான வான் தாக்குதலுக்கும் தயார் நிலையில் இருக்கும் படி விமானப்படைக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.நேத்ரா என்ற கண்காணிப்பு விமானம் நகரின் பல பகுதிகளில் தொடர்ந்து ரோந்துப்பணியை மேற்கொள்ள உள்ளது.