​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வயல்வெளியில் இளைஞரை வெட்டிப் படுகொலை செய்த நபர்கள்... தப்பி ஓடியவர்களை பிடிக்கும் பணி தீவிரம்

Published : Aug 29, 2023 7:41 AM

வயல்வெளியில் இளைஞரை வெட்டிப் படுகொலை செய்த நபர்கள்... தப்பி ஓடியவர்களை பிடிக்கும் பணி தீவிரம்

Aug 29, 2023 7:41 AM

நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம் அருகே உள்ள வயல்வெளியில் இளைஞர் ஒருவர்  மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

சேரன்மகாதேவியைச் சேர்ந்த கணேசன் என்பவர் வழக்கு விசாரணைக்காக  நீதிமன்றத்தில ஆஜராகிவிட்டு இரு சக்கர வாகனம் மூலம்  தருவை நோக்கி சென்றுள்ளார்.

கோபாலசமுத்திரம் விளக்கு அருகே சென்ற போது காரில் வந்த மர்ம நபர்கள் கணேசனை வழிமறித்து வெட்ட முயற்சித்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவர்களிடமிருந்து தப்பித்து கணேசன் அங்கிருந்த வயல்வெளி பகுதிக்கு ஓடிய போது அவரை சூழ்ந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து வயல்வெளியிலேயே கணேசன் உயிரிழந்தார்.