​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவது உறுதி என ஓ.பி.எஸ் பேச்சு

Published : Aug 21, 2023 6:53 AM

நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவது உறுதி என ஓ.பி.எஸ் பேச்சு

Aug 21, 2023 6:53 AM

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தன் சார்பில் வேட்பாளர்களை நிறுத்த உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் சென்னை வேப்பேரியில் நடைபெற்றது. இதில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம், ஜேசிடி பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய ஓ. பன்னீர்செல்வம், தொண்டர்களுக்காக கொண்டு வந்த பொதுச்செயலாளர் பதவியை மீட்டெடுக்க வேண்டும் என்பதே இரண்டாவது தர்ம யுத்தம் என்று குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற தேர்தல் குறித்து பலருக்கும் பல கேள்விகள் உள்ளதாகக் குறிப்பிட்ட பன்னீர்செல்வம் நாடாளுமன்ற தேர்தலில் நாம் வேட்பாளர்களை நிறுத்தப்போகிறோம் என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.