​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கருப்பு பணத்தை புழக்கத்தில் விட்டவர்களை மத்திய அரசு விசாரணை செய்து வருகிறது - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

Published : Aug 20, 2023 6:16 AM

கருப்பு பணத்தை புழக்கத்தில் விட்டவர்களை மத்திய அரசு விசாரணை செய்து வருகிறது - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

Aug 20, 2023 6:16 AM

கருப்பு பணத்தை புழக்கத்தில் விட்டவர்களை மத்திய அரசு விசாரணை செய்து வருகிறது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் ஊழலை புதிய இந்தியா ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்று தெரிவித்தார்.

பாஜக அரசு ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருவதாகக் கூறிய அவர் ஊழலை வேரோடு களைப்பது எளிதான காரியம் அல்ல ஆனால் தொடர்ந்து ஊழலைக் கண்காணித்து வருவதாவும் அவர் தெரிவித்தார்.கடந்த காலங்களில் கருப்பு பணத்தை புழக்கத்தில் விட்டவர்களை மத்திய அரசு கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார்.