​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சோழவரம் அருகே அதிமுக பிரமுகரை வெட்டிக் கொன்ற மர்ம நபர்கள்

Published : Aug 17, 2023 9:08 AM

சோழவரம் அருகே அதிமுக பிரமுகரை வெட்டிக் கொன்ற மர்ம நபர்கள்

Aug 17, 2023 9:08 AM

திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவரை ஆறு பேர் கொண்ட மர்மக்கும்பல் வெட்டி கொலை செய்தது.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளராக உள்ள பார்த்திபன் இன்று காலை தனது வீட்டருகே உள்ள அங்காள ஈஸ்வரி கோயில் மைதானத்தில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தபோது 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கும்பல் அவரை வழிமறித்துள்ளது.

அவர்களிடமிருந்து தப்ப முயற்சித்த பார்த்திபனை, கீழே தள்ளிய கும்பல், அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளது. தகவல் தெரிவிக்கப்பட்டு வந்த செங்குன்றம் போலீசார், சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தனிப்படைகள் அமைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.