​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தி.மு.க.வோடு கூட்டணியில் தொடர திருமாவளவனுக்கு விருப்பமில்லை - ஜெயக்குமார்

Published : May 17, 2023 9:18 PM

தி.மு.க.வோடு கூட்டணியில் தொடர திருமாவளவனுக்கு விருப்பமில்லை - ஜெயக்குமார்

May 17, 2023 9:18 PM

மே தினத்தையொட்டி அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த 310 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் குடும்ப நல நிதி உதவிகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.

இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளிக்கே ஐம்பதாயிரம் ரூபாய் நிவாரணம் கொடுத்துள்ளதாக விமர்சித்தார்.

பா.ஜ.க.வுடனான கூட்டணியை அ.தி.மு.க மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று திருமாவளவன் கூறியது தொடர்பான கேள்விக்கு, தி.மு.க.வோடு கூட்டணியில் தொடர திருமாவளவனுக்கு விருப்பமில்லை என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.