​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆட்டோவை துடைத்துக் கொண்டிருந்த ஓட்டுநர் மீது மோதிய கார்.. பரிதாபமாக பலி..

Published : May 17, 2023 6:51 PM

ஆட்டோவை துடைத்துக் கொண்டிருந்த ஓட்டுநர் மீது மோதிய கார்.. பரிதாபமாக பலி..

May 17, 2023 6:51 PM

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில், சாலையோரம் நின்று தனது ஆட்டோவைத் துடைத்துக் கொண்டிருந்த ஓட்டுநரை அதிவேகமாக வந்த கார் ஒன்று பக்கவாட்டில் மோதி இழுத்துச் சென்றது. இதில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்திய காரில், தூத்துக்குடியைச் சேர்ந்த சாமுவேல் சாம்சன் என்பவர் தனது குடும்பத்தினருடன் பாபநாசம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

வீரவநல்லூர் பிரதான சாலையில், ஓரமாக நின்று ஆட்டோவைத் துடைத்துக் கொண்டிருந்த ராஜா மீது கார் மோதி சிறிது தூரம் அவரை இழுத்துச் சென்றது. சாலையோரம் இருந்த மரம் ஒன்றில் மோதிய பிறகே கார் நின்றது.

தகவலறிந்து விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், நினைவிழந்து இருந்த ஓட்டுநர் ராஜாவுக்கு சி.பி.ஆர். அவசர சிகிச்சை அளித்து காப்பாற்ற முயன்றனர். எனினும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து தொடர்பாக கார் ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.