​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மின்சார ரயிலில் திடீரென தனியாக கழன்ற 4 பெட்டிகள்.. பயணிகள் அச்சம்..!

Published : May 16, 2023 3:26 PM

மின்சார ரயிலில் திடீரென தனியாக கழன்ற 4 பெட்டிகள்.. பயணிகள் அச்சம்..!

May 16, 2023 3:26 PM

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த மின்சார ரயிலின் நான்கு பெட்டிகள் தனியாக கழன்றதையடுத்து, அந்த தடத்தில் இரண்டு மணி நேரம் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

இன்று காலை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டுவரை செல்லும் ரயில் சைதாப்பேட்டை ரயில் நிலையம் வந்து, அங்கிருந்து கிளம்ப தயாரானபோது, நான்கு பெட்டிகள் தனியாக பின்னோக்கி சென்றுள்ளது. 50 மீட்டர் தூரம் சென்ற நிலையில் பெட்டிகள் இல்லாததை அறிந்து லோகோ பைலட் ரயிலை நிறுத்தியுள்ளார். ரயில் இரண்டு பகுதிகளாக பிரிந்து செல்வதை பார்த்த பயணிகள் அசம்பாவிதம் நடந்ததாக அச்சப்பட்டதால், ரயில்வே ஊழியர்கள் நிலைமையை விளக்கி அவர்களை சமாதானப்படுத்தினர்.

இரண்டு பெட்டிகளுக்கு இடையிலான கேபிள் அறுந்ததே பெட்டிகள் தனியாக கழன்றதற்கு காரணம் என தெரியவந்தது. அதை சரி செய்து பெட்டிகளை இணைத்த பிறகு அந்த தடத்தில் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.