​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து போராட்டத்தைக் கைவிடுங்கள்… மல்யுத்த வீராங்கனைகளுக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வேண்டுகோள்

Published : May 15, 2023 6:38 AM

சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து போராட்டத்தைக் கைவிடுங்கள்… மல்யுத்த வீராங்கனைகளுக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வேண்டுகோள்

May 15, 2023 6:38 AM

சட்டத்தின் மீதும் நீதித்துறையின் மீதும் நம்பிக்கை வைத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு மல்யுத்த வீரர் வீராங்கனைகளுக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வேண்டுகோள் விடுத்தார்.

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 22 நாட்களாக மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷணை பாலியல் புகாரில் கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த மல்யுத்த வீரர் வீராங்கனைகள்  பிரிஜ் பூஷண் கைது செய்யப்படும் வரை போராட்டம் நீடிக்கும் என்று தெரிவித்தனர்