​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மூதாட்டியை கொலை செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மருமகள் உட்பட 5 பேர் கைது!

Published : May 15, 2023 6:29 AM



மூதாட்டியை கொலை செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மருமகள் உட்பட 5 பேர் கைது!

May 15, 2023 6:29 AM

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மூதாட்டியை கொலை செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மருமகள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

வடுகபாளையத்தைச் சேர்ந்த 75வயதான தெய்வானையம்மாள் என்ற மூதாட்டி வீட்டில் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மூதாட்டியின் வீட்டிற்கு அருகில் இருந்தவர்கள் நகைக்காக அவரை கொலை செய்தது தெரிய வந்தது. இதனை அடுத்து மருமகள் உள்பட 5பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.