​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சந்தன கட்டைகளை கடத்த வனப்பகுதியில் தீ வைத்த நபர் கைது..!

Published : Mar 02, 2023 2:11 PM

சந்தன கட்டைகளை கடத்த வனப்பகுதியில் தீ வைத்த நபர் கைது..!

Mar 02, 2023 2:11 PM

கோவை மாவட்டம் அக்காமலை வனப்பகுதியில் இருந்து சந்தன கட்டைகளை கடத்த, வனத்துக்கு தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டார்.

ஆணைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் கடந்த 27ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. வனத்துறையினர் 3 நாட்கள் போராடி தீயை அணைத்தனர்.

இந்த நிலையில் பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட வெடிகாரன்பாலி வனப்பகுதியில் சாக்கு மூட்டையில் 16 கிலோ சந்தனக்கட்டைகளுடன் சுற்றிய கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராஜீவ் காந்தியை பிடித்து விசாரித்தனர்.

வனத்துக்கு தீவைத்து வனத்துறையினரின் கவனத்தை திசைத்திருப்பி இந்த சந்தனமரத்தை வெட்டி கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது