​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொள்ளாச்சி அருகே மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில், கூலித் தொழிலாளியை படுகொலை செய்த இறைச்சி கடைக்காரர் கைது..!

Published : Oct 22, 2022 7:29 AM

பொள்ளாச்சி அருகே மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில், கூலித் தொழிலாளியை படுகொலை செய்த இறைச்சி கடைக்காரர் கைது..!

Oct 22, 2022 7:29 AM

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கூலி தொழிலாளி கொலை வழக்கில் தொடர்புடைய இறைச்சி கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு சந்தைப்பேட்டையில் நேற்று முன்தினம் இரவு கூலித்தொழிலாளி குப்புசாமி என்பவர் அடித்து படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு கோழி இறைச்சி கடை நடத்தி வரும் அருண்குமாரை கைது செய்தனர்.

விசாரணையில் சம்பவத்தன்று இருவரும் சேர்ந்து மது அருந்தியதாகவும் ,அப்போது ஏற்பட்ட தகராறில் கல்லால் அடித்து கொலை செய்தாகவும் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.