இந்திய வம்சாவளியினத்தைச் சேர்ந்த பெண் அமைச்சர் சுவெல்லா பிரேவ்மான இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
அரசு சார்ந்த கோப்புகளையும் ஆவணங்களையும் அவர் நாடாளுமன்ற செயலருக்கு அனுப்பி வைத்தார்.
இதுகுறித்த தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள சுவெல்லா தவறே செய்யவில்லை என்பது போல் நடிப்பது, யாரும் அதை அறியவில்லை என்பது போலும் நாம் அதைச் செய்யவே இல்லை என்பது போலும் இருப்பது.
ஏதோ மாயாஜாலம் போல எல்லாம் நல்லபடியாக நடந்து விடும் என்று கருதுவதெல்லாம் தீவிர அரசியல் ஆகாது என்று தெரிவித்துள்ளார்.
தாம் தவறு செய்து விட்டதாகவும் பொறுப்பேற்று ராஜினாமா செய்வதாகவும் அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.கடந்த வாரத்தில் இங்கிலாந்து நிதியமைச்சராக இருந்த குவார்டெங் ராஜினாமா செய்திருந்தார்.