​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதிய தேசிய நெடுஞ்சாலைகளில் ஹெலிகாப்டர்கள் தரையிறங்கும் வசதி - மத்திய அரசு அறிவிப்பு

Published : Oct 19, 2022 9:02 AM

புதிய தேசிய நெடுஞ்சாலைகளில் ஹெலிகாப்டர்கள் தரையிறங்கும் வசதி - மத்திய அரசு அறிவிப்பு

Oct 19, 2022 9:02 AM

நாட்டின் அனைத்து புதிய தேசிய நெடுஞ்சாலைகளும் ஹெலிகாப்டர்கள் தரையிறங்குவதற்கு ஏற்ற வசதியுடன் கட்டப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விபத்துகள் இயற்கைப் பேரிடர்கள் போன்றவை நிகழும் போது அவசர கால உதவிக்கு ஹெலிகாப்டர்கள் தரையிறங்கும் வகையில் அனைத்து புதிய தேசிய நெடுஞ்சாலைகளிலும் ஹெலிபேட் வசதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்துடன் ஆலோசித்து வருவதாகவும் சிந்தியா தெரிவித்துள்ளார்.