வரும் மார்ச் மாதத்திற்குள் 200க்கும் மேற்பட்ட நகரங்களில் 5ஜி சேவை வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மேலும் பல நகரங்களுடன், கிராமப்புறங்களுக்கும் 5ஜி சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கூறினார்.
5ஜி சேவையில் ஒரு நொடிக்கு 20Gbps வரை அல்லது ஒரு நொடிக்கு 100Mbps க்கும் அதிகமான தரவு பரிமாற்ற வேகம் இருக்கும் என்று கூறப்படுகிறது.