​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தன் மீது சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித விசாரணை நடத்தினாலும் அதை சந்திக்க தயார் - சசிகலா

Published : Oct 19, 2022 7:21 AM

தன் மீது சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித விசாரணை நடத்தினாலும் அதை சந்திக்க தயார் - சசிகலா

Oct 19, 2022 7:21 AM

தன் மீது சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித விசாரணை நடத்தினாலும் அதை சந்திக்க தயாராக உள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பு குறித்த விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் சசிகலாவை விசாரிக்க வேண்டுமென ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சசிகலா விடுத்துள்ள அறிக்கையில், விசாரணை ஆணையம் தனது அதிகார வரம்பை மீறி தேவையற்ற அனுமானங்களை சொல்லி பழி போட்டுள்ளதாகக் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சையில் தான் தலையிடவில்லை எனவும், வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு கொண்டு செல்வதைத் தடுக்கவில்லை என்றும் தனது அறிக்கையில் சசிகலா தெரிவித்துள்ளார்.