​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக அமளி.. சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம்!

Published : Oct 18, 2022 6:45 PM

எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக அமளி.. சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம்!

Oct 18, 2022 6:45 PM

எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் முடிவு எடுக்கக்கோரி அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

தமிழக சட்டப்போவை கூடடத்தொடர் இன்று தொடங்கியதும் எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என கோரி எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக கேள்வி நேரத்திற்கு முன்பாகவே விவாதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இதுகுறித்து பேச எதிர்க்கட்சி தலைவருக்கு நேரம் ஒதுக்கி தரப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். பேரவை விதி 32 ன் படி, பேரவை கூடும் முதல் நாளில் வினா விடைக்கு முதல் ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.கலகம் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் வந்துள்ளீர்களா என கேள்வி எழுப்பிய சபாநாயகர் அப்பாவு , இருக்கையில் அமரவில்லை என்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

அப்போது பேசிய அமைச்சர் துரைமுருகன், அவை விதிகளை மீறி நடக்கும் எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். எனினும் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு எதிரக்ட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும ஆதரவு எம்எல்ஏக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அவர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். சுமார் 20 நிமிட அமளிக்குப் பின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆதரவு எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.