​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியா-ஆப்பிரிக்கா நாடுகள் இடையே பாதுகாப்பு பேச்சுவார்த்தை

Published : Oct 18, 2022 7:28 AM

இந்தியா-ஆப்பிரிக்கா நாடுகள் இடையே பாதுகாப்பு பேச்சுவார்த்தை

Oct 18, 2022 7:28 AM

இந்தியா-ஆப்பிரிக்கா நாடுகள் இடையே பாதுகாப்பு பேச்சுவார்த்தை குஜராத் மாநிலம் காந்திநகரில் இன்று நடைபெறுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் எத்தியோப்பியா, மவுரிட்டானியா, காம்பியா, கானா மற்றும் மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்கள்  கலந்துகொள்ள உள்ளனர்.

பேச்சுவார்த்தையில் திறன் மேம்பாடு, இணைய பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு போன்றவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.