​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுபானக் கொள்கை வழக்கு - சி.பி.ஐ தலைமையகத்தில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆஜர்

Published : Oct 18, 2022 7:18 AM

மதுபானக் கொள்கை வழக்கு - சி.பி.ஐ தலைமையகத்தில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆஜர்

Oct 18, 2022 7:18 AM

டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையின் போது, ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுமாறு தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறிய குற்றச்சாட்டை சி.பி.ஐ திட்டவட்டமாக மறுத்துள்ளது.

சி.பி.ஐ அதிகாரிகள் நடத்திய 9 மணி நேர விசாரணைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், முறைகேடு தொடர்பான வழக்கு போலியானது என்றும்,தன்னை டெல்லி முதல்வராக்குவதாக அவர்கள் கூறியதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே, மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக முதல்தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின்படி விசாரணை  சட்டப்படி தொடரும் என்று சி.பி.ஐ தெரிவித்திருக்கிறது.