அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில், சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் தங்களது வாக்குகளை பதிவுசெய்தனர்.
காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மன்மோகன்சிங் ஆகியோர் தங்களது வாக்குகளை பதிவுசெய்தனர்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூரிலும், சசி தரூர் திருவனந்தபுரத்திலும் வாக்களித்தனர். ஒற்றுமை இந்தியா நடைபயணத்தில் உள்ள ராகுல் காந்தி சங்கனக்கல்லுவில் வாக்களித்தனர்.