​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொள்ளாச்சியில் ஆப்கானிஸ்தான் நாட்டு போதை பொருட்களை விற்பனை செய்த 2 பேர் கைது..!

Published : Oct 17, 2022 12:49 PM

பொள்ளாச்சியில் ஆப்கானிஸ்தான் நாட்டு போதை பொருட்களை விற்பனை செய்த 2 பேர் கைது..!

Oct 17, 2022 12:49 PM

பொள்ளாச்சி அருகே, ஆப்கானிஸ்தான் நாட்டு போதை பொருட்களை விற்பனை செய்த இரண்டு பேரை கிணத்துக்கடவு போலீசார் கைது செய்துள்ளன.

ஆர்.எஸ்.ரோடு பகுதியில் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் போதைபொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ராம்குமார் மற்றும் கிஷோரை விசாரணை செய்து சோதனையிட்டதில், விற்பனை செய்வதற்காக போதை பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 100 கிராம் போதை பவுடர்,17 போதை மாத்திரைகள்,19 போதை ஸ்டாம்புகளின் மொத்த மதிப்பு சுமார் 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.