அதிமுக தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்து, 51ம் ஆண்டு தொடங்குவதை அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடினர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலையமைகத்தில் மறைந்த மூத்த தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல் கட்சித் தொண்டர்களுக்கு அவர் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
இதேபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிமுகவினர் அக்கட்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.